முதலமைச்சர் குமாரசாமிக்கு ஆளுநர் அவசர கடிதம் : நம்பிக்கை ஓட்டெடுப்பு குறித்து சபாநாயகர் முடிவு?

கர்நாடக சட்டமன்றத்தில் இன்று பிற்பகல் ஒன்றரை மணிக்கு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று அம்மாநில முதலமைச்சர் குமாரசாமிக்கு ஆளுனர்,அவசர கடிதம் எழுதியுள்ளார்
முதலமைச்சர் குமாரசாமிக்கு ஆளுநர் அவசர கடிதம் : நம்பிக்கை ஓட்டெடுப்பு குறித்து சபாநாயகர் முடிவு?
x
கர்நாடக சட்டமன்றத்தில் முதலமைச்சர்  குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது, காரசார விவாதம் நடைபெற்றது. அவை கூடியதும் முதலில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா இன்றே நம்பிக்கை ஓட்டெடுப்பை நடத்தி முடிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் நம்பிக்கை ஓட்டெடுப்பை அவசரமாக நடத்த முடியாது என்று கூறினார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர்  குமாரசாமி , தமது அரசு மீது ஆதாரமற்ற 
குற்றச்சாட்டுக்கள் கூறப்படுவதாகவும், கூட்டணி ஆட்சி குறித்து ஆரம்பம் முதலே சிலர் தவறான தகவல்களை பரப்பி வருவதாகவும் குற்றம்சாட்டினார். 

ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து சட்டமன்றத்தில்  விவாதிக்க தயார் என்று கூறிய குமாரசாமி . பா.ஜ.க. துணையுடன் தான் அதிருப்தி எம்எல்ஏ.க்கள் 
உச்சநீதிமன்றம் சென்றதாக குற்றம்சாட்டினார். ஒரு வரியில் சபாநாயகரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்து  விட்டு, அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் உச்சநீதிமன்றத்தில் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தாகவும் குமாரசாமி கூறினார்.  

பின்னர் பேசிய கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா உச்சநீதிமன்ற  தீர்ப்பில் குழப்பம் உள்ளதாகவும் , இதனால்  நம்பிக்கை ஓட்டெடுப்பை தள்ளி வைக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டார். கொறடா உத்தரவை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தக்கூடாது என கர்நாடக சட்ட அமைச்சர் கூறினார். 

இதனை தொடர்ந்து, அவையில் கடும் அமளி நிலவியது. இதையடுத்து அவையை இன்று காலை 11 மணி வரை சபாநாயகர் ஒத்தி வைத்தார். 

Next Story

மேலும் செய்திகள்