சென்னை-சேலம் இடையிலான எட்டு வழிச்சாலை : ரத்து செய்ய முதலமைச்சர் ஒப்புதல் - அன்புமணி ராமதாஸ்

சென்னை-சேலம் இடையிலான எட்டு வழிச்சாலையை ரத்து செய்ய முதலமைச்சர் ஒப்புதல் அளித்திருப்பதாக பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை-சேலம் இடையிலான எட்டு வழிச்சாலை : ரத்து செய்ய முதலமைச்சர் ஒப்புதல் - அன்புமணி ராமதாஸ்
x
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஐந்து மாவட்ட விவசாயிகள் நலன்களை காக்கும் வகையிலான முதலமைச்சரின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது எனக் குறிப்பிட்டுள்ளார். எட்டு வழிச்சாலை வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்யாது என அன்புமணி ராமதாஸ் உறுதி அளித்தார். இந்த விஷயத்தில், தோல்வியை ஒப்புக்கொண்டு ஸ்டாலின் அரசியலில் இருந்து விலகுவாரா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை & சேலம் இடையிலான 8 வழிச்சாலை விவகாரத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை என்பது தான் உண்மை என அன்புமணி சாடியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்