காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்கு ஆண்டுதோறும் ரூ.72 ஆயிரம் - ராகுல்காந்தி அதிரடி அறிவிப்பு

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்கு ஆண்டுதோறும் 72 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என ராகுல்காந்தி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்கு ஆண்டுதோறும் ரூ.72 ஆயிரம் - ராகுல்காந்தி அதிரடி அறிவிப்பு
x
டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் அக்கட்சியின் காரிய கமிட்டி கூட்டம், ராகுல் காந்தி தலைமையில் நேற்று நடைபெற்றது. அதில், நாடாளுமன்ற தேர்தலுக்கான கட்சியின் தேர்தல் அறிக்கைக்கு இறுதி வடிவம் அளிக்கப்பட்டது. கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருவாய் உறுதி அளிக்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக கூறினார். 

இதன்படி, மிகவும் வறிய நிலையில் உள்ள 20 சதவீத குடும்பங்களுக்கு குறைந்தபட்ச வருமானமாக ஆண்டொன்றுக்கு 72 ஆயிரம் ரூபாய் வீதம் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என தெரிவித்தார். 5 கோடி குடும்பங்களுக்கு இந்த நிதி உதவி கிடைக்கும் எனவும், அந்த குடும்பங்களில் உள்ள 25 கோடி பேர், இத்திட்டத்தால் நேரடியாக பலன் பெறுவார்கள் எனவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்