இன்று ஈரோடு வருகிறார் அமித்ஷா - தமிழிசை...

தமிழகம் வரும் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா இன்று கட்சி நிர்வாகிகள் அலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார்.
x
கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடி திருப்பூருக்கு வந்து சென்ற நிலையில், அமிஷ்ஷா இன்று ஈரோடு வருகிறார். சித்தோடு அருகே உள்ள டெக்ஸ்வேலியில் காலை 11 மணிக்கு நெசவாளர் பிரதிநிதிகளை சந்தித்து உரையாடுகிறார். இதையடுத்து நண்பகல் 12 மணியளவில் சித்தோடு - பெருந்துறை சாலையில் உள்ள ஸ்ரீநகரில் பா.ஜ.க. வாக்குச் சாவடி நிர்வாகிகளை  சந்திக்கிறார். இதைத் தொடர்ந்து, ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்தில் தமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணன், முரளிதரராவ், ஹெச்.ராஜா, இல.கணேசன், வானதிசீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்... இதையடுத்து, கங்காபுரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசிவிட்டு, டெல்லிக்கு புறப்படுகிறார். இதேபோல் மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், நிதின் கட்கரி உள்ளிட்டோர் தமிழகம் வரவுள்ளதாகவும் தமிழிசை கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்