ஜன. 28 - ல் திருவாரூர் இடைத்தேர்தல் : தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மறைவைத்தொடர்ந்து, காலியாக இருக்கும் திருவாரூர் தொகுதியில், வருகிற 28 ம் தேதி, இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
x
* திருவாரூர் தொகுதி இடைத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.  இதன்படி, வேட்புமனு தாக்கல் வருகிற 3 ம் தேதி துவங்குகிறது,  வேட்பு மனு தாக்கல் செய்ய ஜனவரி 10 ம் தேதி கடைசி நாளாகும். 
 
* 11 ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறும்.  ஜனவரி 14 ம் தேதி மாலை வரை, வேட்புமனுக்களை வாபஸ் பெற அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. 

* ஜனவரி 28 ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள், 31 ம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்