பேனர் வைக்க அனுமதி மறுப்பு - அமமுகவினர் மறியல்...

ஆண்டிப்பட்டியில் பிளக்ஸ் பேனர் வைக்க அனுமதி மறுக்கப்பட்டதால் தங்கதமிழ்செல்வன் தலைமையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பேனர் வைக்க அனுமதி மறுப்பு - அமமுகவினர் மறியல்...
x
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில், பிளக்ஸ் பேனர் வைக்க அனுமதி மறுக்கப்பட்டதால் தங்கதமிழ்செல்வன் தலைமையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரும் 10 ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு, அ.ம.மு.க நிர்வாகிகள் சார்பில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டு வருகிறது. இதற்கு அதிமுக தரப்பினர் மறுப்பு தெரிவித்ததால், தங்கதமிழ்செல்வன், கட்சியினருடன் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். போலீசார், சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போதிலும் மறியலை கைவிட தங்க தமிழ்செல்வன் மறுத்து விட்டார். 



Next Story

மேலும் செய்திகள்