இலங்கை அரசியல் பிரமுகர்களின் இந்திய வருகை குறித்து மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் - ஸ்டாலின்

இலங்கை அரசியல் பிரமுகர்களின் இந்திய வருகை குறித்து மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை அரசியல் பிரமுகர்களின் இந்திய வருகை குறித்து மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் - ஸ்டாலின்
x
இலங்கை அரசியல் பிரமுகர்களின் இந்திய வருகை குறித்து மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை பிரதமராக  ராஜபக்சே திடீரென பதவியேற்றுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை அரசில் நடைபெற்றுள்ள தலைகீழ் மாற்றங்கள், ஈழத்தில் வாழும் தமிழர்களுக்கு மட்டுமின்றி, தமிழகத்தில் உள்ள தமிழர்களுக்கும் பதற்றத்தையும், அச்ச உணர்வையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தமிழர்கள் நலன் கருதியும், தமிழக மீனவர்களின் பாதுகாப்பு கருதியும் இலங்கை அரசியல் பிரமுகர்களின் இந்திய வருகை குறித்தும், ரா உளவுப் பிரிவு மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு குறித்தும் தெளிவு படுத்திட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுதலை தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல் இருப்பது தமிழக மக்களின் உணர்வுகளுக்கு விடுக்கப்பட்ட சவாலாக தெரிவதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்