"பொருளாதார வளர்ச்சியின் மீது கவனம் செலுத்துங்கள்" - மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி வதேரா வலியுறுத்தல்

மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு பொருளாதார வளர்ச்சியின் மீது கவனத்தை செலுத்த வேண்டும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா வலியுறுத்தி உள்ளார்.
பொருளாதார வளர்ச்சியின் மீது கவனம் செலுத்துங்கள் - மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி வதேரா வலியுறுத்தல்
x
மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு பொருளாதார வளர்ச்சியின் மீது கவனத்தை செலுத்த வேண்டும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா வலியுறுத்தி உள்ளார்.  இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது மந்த நிலையை எட்டியுள்ளதாகவும், மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்பான கணிப்பு சிறப்பாக சொல்லும்படி இல்லை என்றும் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.  பொருளாதார வளர்ச்சி இந்த நிலையில் நீடித்தால் வர்த்தகர்கள், ஏழைகள், தினக் கூலிகள் உள்ளிட்டோர்  கடுமையாக பாதிக்கப்படுவர் என்றும், அரசுக்கு இந்த பிரச்சனையில் தெளிவான இலக்கு இல்லை என்று தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்