டெல்லியில் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் இன்று 3வது நாளாக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் இன்று 3வது நாளாக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. அங்குள்ள சீலம்பூர், ஜாஃப்ராபாத் ஆகிய இடங்களில், போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், போலீசார் மீது கற்கள் வீசப்பட்டடன. இதையடுத்து தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டு வீசியும் போராட்டக்காரர்களை போலீசார் கலைத்தனர். இந்த போராட்டத்தின் போது 2 பேருந்துகள் சூறையாடப்பட்டன. போராட்டத்தால் சீலம்பூர் முதல் ஜாஃப்ராபாத் வரையிலான சாலை மூடப்பட்டது. மேலும், ஜாஃப்ராபாத், பாபர்புர் கோகுல்பூரி உள்ளிட்ட மெட்ரோ ரயில் நிலையங்களின் அனைத்து வாயில்களும் மூடப்பட்டன. மெட்ரோ ரயில்கள், அந்த நிறுத்தங்களில் நிற்காது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story