பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி : தேசியக் கொடியுடன் திரண்டவர்களால் பரபரப்பு

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறை பெருகிவிட்டதாகக் கூறி பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றவர்களை போலீஸார் கைது செய்தனர்.
பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி : தேசியக் கொடியுடன் திரண்டவர்களால் பரபரப்பு
x
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறை பெருகிவிட்டதாகக் கூறி பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றவர்களை போலீஸார் கைது செய்தனர். டெல்லியில் பிரதமர் அலுவலகத்தை நோக்கி வந்த 100-க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும், பெண்கள் மீதான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் கூறி தேசியக் கொடியுடன் பேரணியாக செல்ல முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த பாதுகாப்புப் படையினர் அவர்களை தடுத்து நிறுத்த முயன்றனர். அப்போது இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் அவர்களை போலீஸார் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்