அயோத்தி வழக்கில் எழுத்துப்பூர்வ வாதங்கள் : இந்து, முஸ்லிம் அமைப்புகள் சார்பில் தாக்கல்

அயோத்தி வழக்கில் இந்து மற்றும் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வ வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அயோத்தி வழக்கில் எழுத்துப்பூர்வ வாதங்கள் : இந்து, முஸ்லிம் அமைப்புகள் சார்பில் தாக்கல்
x
உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அயோத்தி வழக்கை தொடர்ச்சியாக 40 நாட்கள் விசாரித்தது. இந்த வழக்கு தொடர்பான வாதங்கள் அனைத்தும் கடந்த 16-ஆம் தேதியுடன் நிறைவடைந்தன. இந்நிலையில் இந்து மற்றும் முஸ்லிம் அமைப்புகள் சார்பாக இந்த வழக்கில் எழுத்துப்பூர்வ வாதங்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கின் தீர்ப்பு  ஏற்கனவே ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 17 ஆம் தேதியுடன் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பதவி நிறைவடைய உள்ளதால் அதற்கு முன்னதாக அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்