அயோத்தியில் டிச.10ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு

அயோத்தியில் டிசம்பர் 10ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அயோத்தியில் டிச.10ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு
x
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி மற்றும் ராமஜென்ம பூமி அமைந்திருந்த இடம் எனக் கூறப்படுகிற 2 புள்ளி 77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான  அரசியல்சாசன அமர்வு விசாரித்து வருகிறது. விசாரணையின் 40-வது நாளான அக்டோபர் 16 ஆம் தேதி, அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்பதற்கான கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 17 ஆம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என்றும், இந்த வழக்கிற்கான தீர்ப்பு வரும் நவம்பர் 4 அல்லது 5 ஆம் தேதி வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், அயோத்தியில் 144 தடை உத்தரவை உத்தரபிரதேச மாநில போலீசார் பிறப்பித்துள்ளனர். அயோத்தியில் டிசம்பர் 10-ந்தேதி வரை இந்த 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

Next Story

மேலும் செய்திகள்