புதுச்சேரி செங்கழுநீரம்மன் கோயில் தேர்த்திருவிழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்

புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோயில் தேர்த்திருவிழா விமரிசையாக நடைபெற்றது.
புதுச்சேரி செங்கழுநீரம்மன் கோயில் தேர்த்திருவிழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்
x
புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோயில் தேர்த்திருவிழா விமரிசையாக நடைபெற்றது. கோயிலின் ஆடித்திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, மாநில முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோர் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தேர் திருவிழாவை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்