சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு
ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்பட உள்ளது.
ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்பட உள்ளது. இன்று முதல் வருகிற 21ஆம் தேதி வரை மொத்தம் ஐந்து நாட்கள் நெய் அபிஷேகம், படி பூஜை, சகஸ்ரகலச பூஜை உள்பட அனைத்து சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற உள்ளது. நாளை புதிய மேல்சாந்தி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளார். இதற்காக ஒன்பது பேரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அனைத்து பூஜைகள் நிறைவு செய்த பிறகு வருகிற 21ஆம் தேதி இரவு 10 மணி 30 நிமிட அளவில் சபரிமலை நடை மீண்டும் அடைக்கப்படுகிறது.
Next Story