மேலும் 5 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறி : வைரஸ் பரவல் குறித்து ஆராய்ச்சி குழு ஆய்வு

கேரளா மாநிலம் எர்ணாகுளத்தை அடுத்த கடம்பாசேரியில், மேலும் 5 பேருக்கு நிபா வைரஸ் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் 5 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறி : வைரஸ் பரவல் குறித்து ஆராய்ச்சி குழு ஆய்வு
x
கடம்பாசேரி மருத்துவமனையில், இதுவரை 20க்கும் மேற்பட்டோர் நிபா வைரஸ் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நிபா வைரஸ் பரவால் அச்சம் அடைந்துள்ள தமிழக மக்கள், இரு மாநில எல்லையில், கண்காணிப்பை தீவிரப்படுத்தி, மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதனிடையே, நிபா வைரஸ் பரவலை தடுக்க கேரள மாநில அரசு பல நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக புனேவை சேர்ந்த ஆராய்ச்சிக் குழு, தொடுபுழா முட்டம் உள்ளிட்ட பகுதிகளில் பழந்தின்னி வவ்வால்களை பிடித்து, நிபா வைரஸ் தாக்கம் உள்ளதா என பரிசோதனை செய்து வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்