"குறவர் என்பதை மாற்ற வேண்டும் " - வனவேங்கை கட்சியினர் சாலை மறியல் - வாக்குவாதம் - தள்ளுமுள்ளு - பரபரப்பு
"குறவர் என்பதை மாற்ற வேண்டும் " - வனவேங்கை கட்சியினர் சாலை மறியல் - வாக்குவாதம் - தள்ளுமுள்ளு - பரபரப்பு
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்ட வனவேங்கை கட்சியினரால் பரபரப்பு ஏற்பட்டது. நரிக்குறவர் என்ற பெயரில் குறவர் என்பதை மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெண்கள் உள்ளிட்ட 100 -க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர். இதனால், தேனி, மதுரை சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதித்தது.
பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்த, கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, போலீசார் அனைவரையும் கைது செய்தனர்.