தலைவருக்கு சேர் போடாத அதிகாரி.. ஆத்திரத்தில் லெப்ட் ரைட் வாங்கிய தலைவர் - பரபரப்பான ஆய்வு கூட்டம்

Update: 2023-07-15 08:13 GMT

நாகையில் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை உறுதிமொழி குழுவின் ஆய்வு கூட்டத்தில், மீன்வளர்ச்சி கழக தலைவருக்கு இருக்கை ஒதுக்காதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது, மீன் வளர்ச்சி கழக தலைவருக்கு மேடையில் இருக்கை போடவில்லை என கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த அவர்,செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலரை கேள்வியால் துளைத்து எடுத்தார்....

Tags:    

மேலும் செய்திகள்