இன்ஜினியர் உயிரை பறித்த காதல்... தலை சிதைக்கப்பட்ட நிலையில் கொடூரம் -உளுந்தூர்பேட்டையில் அதிர்ச்சி

Update: 2022-12-27 17:07 GMT

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆரியநத்தம் கிராமத்தை சேர்ந்த பிரபு என்ற இளைஞர், சிவில் இன்ஜினியரிங் முடித்துவிட்டு, தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். தனது நண்பர் வீட்டுக்கு சென்று வருவதாகக் கூறி சென்ற பிரபு, நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். எங்கும் தேடியும் கிடைக்காததால், காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனிடையே, உளுந்தூர்பேட்டை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், தலை சிதைந்த நிலையில் இளைஞரின் சடலம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் அங்கு சென்று பார்த்தபோது, சடலமாக கிடந்த நபர், காணாமல் போன பிரபு என தெரியவந்தது. திருப்பூரில் பிரபு பணிபுரிந்து வந்தபோது, ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், பெண் வீட்டார் திட்டமிட்டு இந்த கொலையை செய்திருக்கலாம் என்றும் உயிரிழந்த பிரபுவின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்