கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம் - கொதித்தெழுந்த சரத்குமார்

கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம் - கொதித்தெழுந்த சரத்குமார்

Update: 2022-07-17 03:48 GMT

கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம் - கொதித்தெழுந்த சரத்குமார்

கள்ளக் குறிச்சி மாணவி மர்ம மரணம் குறித்து நீதி விசாரணை வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார். மாணவி ஸ்ரீமதியின் உயிரிழப்பிற்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில், இந்த பள்ளியில் இதுபோல 7 உயிரிழப்புகள் மர்மமான முறையில் நடந்ததாக வெளிவரும் செய்திகள் நெஞ்சை பதறச் செய்வதாக தெரிவித்துள்ளார். பெற்றோர் அச்சத்தில் உள்ளதால், மாணவர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மாணவியை இழந்து தவிக்கும் பெற்றோருக்கு பள்ளி நிர்வாகத்திடம் இருந்து 50 லட்சம் ரூபாயை நிவாரணமாக அரசு பெற்றுத்தர வேண்டும் என்றும் அவரது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்