ஜல்லிக்கட்டு வீரருக்கு திருமணம் - ஜல்லிக்கட்டு காளையை பரிசளித்த நண்பர்கள்
அருப்புக்கோட்டை காமராஜர் நகரைச் சேர்ந்த அருண் என்பவருக்கு இன்று திருமணம் நடைபெற்றது.
ஜல்லிக்கட்டு வீரரான இவர், மதுரை அலங்காநல்லூர், பாலமேடு என பல ஊர்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.
இவருக்கு, அண்மையில் பாலமேடு ஜல்லிக்கட்டில் தங்கம் வென்ற அதிரா என்ற காளையை நண்பர்கள் திருமணப் பரிசாக அளித்துள்ளனர்.
மேலும், நாட்டு நாய்கள், சண்டை போடும் கிடா, சண்டை சேவலை ஆகியவற்றையும் பரிசாக அளித்துள்ளனர்.