"ஸ்டெர்லைட் ஆலை மூடலால் நீதிபதியும் பாதிப்பு" - ஓய்வுபெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் பரபரப்பு தகவல்

Update: 2023-04-28 06:03 GMT

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் நீதிபதி ஒருவரும் பாதிக்கப்பட்டார் என்று ஓய்வுபெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் கூறியுள்ளார்.

சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய அவர், ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய முடியாது என்று கூறியதற்காக நீதிபதி சிவஞானம் சென்னையில் இருந்து கல்கத்தாவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டார் என்றார். கொலீஜியம் பரிந்துரை செய்தும், நீதிபதி சிவஞானத்தால் தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற முடியவில்லை என்றும் அவர் கூறினார். கோவில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்றால், அவ்வாறு நடக்காது என்று அமைச்சர் சேகர் பாபு கூறுவதாக தெரிவித்த ஹரிபரந்தாமன், கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்