"ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்...பாஜக நிலைப்பாட்டுக்கு ஆதரவு"

Update: 2023-01-25 03:54 GMT

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், பாஜகவின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு அளிப்பதாக, இந்திய ஜனநாயக கட்சி தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்டு வரும் பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின் கீழ், தமிழ்நாடு பாஜக சிறப்பாக இயங்கி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

எனவே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், பாஜகவின் நிலைப்பாட்டை முழுமனதோடு ஆதரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்