சோசியல் மீடியாவில் தொடர்பு.. முதியவரை குத்தி கொன்ற 8 சிறுமிகள்

Update: 2022-12-23 07:59 GMT

முதியவரை 8 சிறுமிகள் சேர்ந்து கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் கனடாவில் நிகழ்ந்துள்ளது... சமூக வலைதளம் மூலம் கொலை செய்த சிறுமிகளுக்கும் இறந்த முதியவருக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது... டொரன்டோ ரயில் நிலையம் அருகே அவர்கள் சந்தித்த நிலையில், வாக்கு வாதம் ஏற்பட்டு கைகலப்பாகி இறுதியில் சிறுமிகள் ஆத்திரத்தில் கத்தியால் அந்த 59 வயது முதியவரைக் குத்தி கொலை செய்துள்ளனர்... கொலையில் சம்பந்தப்பட்ட சிறுமிகள் 13 மற்றும் 14 வயதினரே ஆவர்... 8 சிறுமிகளையும் கைது செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்...

Tags:    

மேலும் செய்திகள்