அவசர சிகிச்சை பிரிவில் தாய்... திருமண கோலத்தில் மகள்... மருத்துவமனையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

Update: 2022-12-27 11:20 GMT

தாயின் ஆசையை நிறைவேற்றுவதற்காக, அவரது மகள் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம், கயா பகுதியைச் சேர்ந்தவர் பூனம். இவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே இவரது மகள் சாந்தினிக்கு திருமணம் நிச்சயிக்கப் பட்டிருந்தது. தனது கண் முன்னே தனது மகளின் திருமணம் நடைபெறவேண்டும் என விரும்புவதாக பூனம் தனது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். இதையறிந்த, சாந்தினி தாயின் விருப்பத்தை நிறைவேற்ற முடிவெடுத்துள்ளார். இது தொடர்பாக மணமகன் வீட்டாரிடம் அவர் பேசிய நிலையில், அவர்களும் சாந்தினி விருப்பத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, மருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவில் தனது தாயின் முன்னே சாந்தினி திருமணம் செய்து கொண்டார். இந்த சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்