டென்னிஸ் மைதானத்துக்குள் நுழைந்து.. திடீரென தீ வைத்துக்கொண்ட நபர்! அதிர்ந்துபோன அதிகாரிகள்

Update: 2022-09-24 03:05 GMT

லேவர் கோப்பை டென்னிஸ் தொடரில் மைதானத்திற்குள் சுற்றுச்சூழல் ஆர்வலர், தனது கையில் தீ வைத்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சிட்ஸிபாஸ், ஸ்வார்ட்ஸ்மேன் இடையிலான போட்டியின்போது, மைதானத்துக்குள் ஒருவர் நுழைந்தார். அவரது டி-சர்ட்டில் தனியார் ஜெட் நிறுவனங்களை மூட வேண்டும் என்ற வாசகங்கள் இடம்பெற்று இருந்த நிலையில், அவர் திடீரென தனது கைகளுக்கு தீ வைத்துக் கொண்டார். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்ட நிலையில், அங்கிருந்த காவலர்கள் அவரை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். 

Tags:    

மேலும் செய்திகள்