கடைக்குள் புகுந்த மானை விரட்டிய வனத்துறை - பைக்கில் சென்றவரை இடித்து தள்ளிய பயங்கரம் - அதிர்ச்சி காட்சி.

Update: 2023-01-22 04:51 GMT

உத்தரப்பிரதேச மாநிலம் மிர்ஷாபூரில் மான் ஒன்று இடித்துத் தள்ளியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் படுகாயமடைந்தார். மிர்ஷாபூரில் உள்ள கடை ஒன்றில் புகுந்த நில்கை வகை மானை, வனத்துறையினர் விரட்டினர். அங்கிருந்து, வேகமாக ஓட்டம் பிடித்த‌து. அதே நேரத்தில், சென்ற வேகத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற நபரை இடுத்துத் தள்ளி, தலைக்குப்புற விழுந்த‌து. பின்னர், தடுமாறி எழுந்த மான் அங்கிருந்து ஓடிய நிலையில், படுகாயமடைந்த நபரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்