காதல் விவகாரத்தில் ஏற்பட்ட மோதல்... Ex காதலனை தாக்க வந்த தற்போதைய காதலன் - தடுக்க வந்த நண்பனுக்கு நிகழ்ந்த பரிதாபம்

Update: 2023-04-19 12:25 GMT

குளித்தலை அரசு கலை கல்லூரியில் படித்து வருபவர் குரு பிரகாஷ். இவரும் அதே கல்லூரியில் படித்து வந்த மாணவியும் காதலித்து வந்த நிலையில், இருவருக்கிடையே திடீரென காதலில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கீழ்க்குட்டப்பட்டியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான அருண்குமார் என்பவரை மாணவி காதலித்து வந்துள்ளார். இதையறிந்த குரு பிரகாஷ் மாணவியை தொலை பேசியில் தொடர்பு கொண்டிருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த ஆட்டோ ஓட்டுநரான அருண்குமார், குரு பிரகாஷ் படிக்கும் அதே கல்லூரி மாணவர்களை சேர்த்து கொண்டு மாணவனிடம் தகராறு செய்ய சென்றுள்ளார். அங்கு தகராறு கைகலப்பாக மாறவே குரு பிரகாஷை தாக்கிய கும்பல், தடுக்க வந்த அவரின் நண்பரான விக்னேஷையும் பலமாக தாக்கியுள்ளனர். இதில், படுகாயமடைந்த இருவரையும் அக்கம்பக்கதினர் மீட்டு மருத்துவமணையில் அனுமதித்த நிலையில் விக்னேஷ்வரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் ஆட்டோ ஓட்டுநர் உட்பட, கல்லூரி மாணவர்கள் 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்