இடி தாக்கி 5 ஆடுகள், 1 மாடு உயிரிழப்பு

Update: 2022-12-13 02:10 GMT

பொன்னேரி அருகே இடி தாக்கி 5ஆடுகளும், 1 மாடும் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சுற்றுவட்டார பகுதிகளில், இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது ஏலியம்பேடு கிராமத்தில், இடி தாக்கியதில் 5 ஆடுகளும், ஒரு மாடும் உயிரிழந்தன. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்