மெக்சிகோவில் வழக்கத்திற்கு மாறான கனமழை - கடும் வெள்ளப்பெருக்கு பாதிப்பு

மெக்சிகொ நகரில் வழக்கத்திற்கு மாறான தொடர் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

Update: 2021-09-10 10:23 GMT
மெக்சிகொ நகரில் வழக்கத்திற்கு மாறான தொடர் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கவ்டிட்லன் இஸ்கல்லி மற்றும் எகபடெக் ஆகிய பகுதிகள் வெள்ளப்பெருக்கால் தீவிரமாக பாதிப்படைந்தன. டுலா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளபெருக்கால் வெள்ள நீர் மருத்துவமனை ஒன்றிற்குள் புகுந்ததில், கொரோனா நோயாளிகள் உட்பட 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் குறைந்தபட்சம் 2 ஆயிரம் வீடுகளாவது வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கக் கூடும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்