துருக்கியில் ஏற்பட்ட திடீர் காட்டுத்தீ - பல்வேறு நகரங்களை சூழ்ந்துள்ளதால் பதற்றம்

துருக்கியின் தெற்குப் பகுதியில் உள்ள கடற்கரை நகரமான மார்மரிஸ் பகுதியில் திடீர் காட்டுத் தீ ஏற்பட்டு உள்ளது.

Update: 2021-07-31 04:08 GMT
துருக்கியின் தெற்குப் பகுதியில் உள்ள கடற்கரை நகரமான மார்மரிஸ் பகுதியில் திடீர் காட்டுத் தீ ஏற்பட்டு உள்ளது. மேலும் அப்பகுதியில் வீடும் காற்றின் காரணமாக அருகில் உள்ள நகரங்களை நோக்கி காட்டு தீ வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். அப்பகுதியில் நிலவும் கடும் புகை மூட்டம் காரணமாக 100க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சொகுசு விடுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்