பணியின் போது பலியான மோப்ப நாய் - அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்

அமெரிக்காவின் மசாசுசெட்டில், காவல்துறையில் பணியாற்றிய மோப்ப நாய், பணியின் போது உயிரிழந்த நிலையில், அரசு மரியாதையுடன் அதன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Update: 2021-06-23 05:06 GMT
அமெரிக்காவின் மசாசுசெட்டில், காவல்துறையில் பணியாற்றிய மோப்ப நாய், பணியின் போது உயிரிழந்த நிலையில், அரசு மரியாதையுடன் அதன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. கிட் என்றழைக்கப்படும் அந்த மோப்ப நாய், குற்றவாளியைத் துரத்திப் பிடிக்கும் போது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பரிதாபமாக உயிரிழந்தது. இதில் 2 காவல்துறையினரும் படுகாயமடைந்தனர். இந்நிலையில், துப்பாக்கி குண்டுக்கு பலியான, கிட்டின் உடல் மனிதர்களைப் போலவே அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்