இஸ்ரேல் - பாலஸ்தீனம் நீடிக்கும் மோதல்; அமைதியை நிலைநாட்ட முயற்சி

இஸ்ரேல் - பாலஸ்தீனத்துக்கு இடையேயான மோதல் தீவிரம் அடைந்துள்ள நிலையில், இரு தரப்புக்கும் இடையே அமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் வெள்ளை மாளிகை ஈடுபட்டு உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்து உள்ளார்.

Update: 2021-05-17 06:05 GMT
இஸ்ரேல் - பாலஸ்தீனத்துக்கு இடையேயான மோதல் தீவிரம் அடைந்துள்ள நிலையில், இரு தரப்புக்கும் இடையே அமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் வெள்ளை மாளிகை ஈடுபட்டு உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்து உள்ளார். இது குறித்து பேசிய அவர், இஸ்ரேலியர்களும் பாலஸ்தீனியர்களும், சுதந்திரமாகவும் பாதுகாப்புடனும் வாழ தகுதியானவர்கள் என்று தெரிவித்தார். இரு தரப்பினரும் ஜனநாயக முறைப்படி வாழவேண்டும் என்று கூறிய பைடன், தனது நிர்வாகம், இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே அமைதியை நிலைநாட்டும் முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்