மியான்மரில் பல்கலைக் கழக மாணவர்கள் பேரணி

மியான்மர் ராணுவத்தின் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்நாட்டு பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-04-04 20:36 GMT
மியான்மர் ராணுவத்தின் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்நாட்டு பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தவேய் நகரில் நடந்த போராட்டத்தில் ஏராளமான மாணவர்கள் பேரணியாக சென்றனர். பரிதாபகரமாக, இந்தப் பேரணியில் சிறுவர், சிறுமிகளும் பங்கேற்றனர். ராணுவத்துக்கு எதிரான பதாகைகளை கையில் ஏங்தியிருந்த போராட்டக்காரர்கள், ராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்தனர். மியான்மரில் ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட்ட ராணுவம், அதற்கு எதிராக போராடுபவர்களை கொன்று குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்