முதல்முறையாக முக கவசம் அணிந்தார் அமெ. அதிபர் டிரம்ப்

அமெரிக்கா அதிபர் டிரம்ப், முதல்முறையாக பொதுவெளியில் முககவசம் அணிந்து வந்தார்.

Update: 2020-07-12 05:04 GMT
உலகம் முழுவதும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் வேகமாக பரவி வரும் நிலையில், பல்வேறு நாடுகளில் பொது வெளியில் வரும் போது, மக்கள் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை வலியுறுத்தும் விதமாக பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு உலக தலைவர்களும் முக கவசம் அணிந்தே தோன்றினர். ஆனால், உலகிலேயே கொரோனா தொற்றில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ள போதிலும், அந்நாட்டு அதிபர் டிரம்ப், முக கவசம் அணிவதை இதுவரை தவிர்த்து வந்தார். முக கவசம் அணிவது ஒருவரது தனிப்பட்ட விருப்பம் என்றும் அவர் கூறி வந்தார். அவரது இந்த செயலை பல்வேறு தரப்பினர் விமர்சித்து வந்தனர். இந்நிலையில், மேரிலாண்ட் மாகாணத்தில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காயமடைந்த வீரர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களை சந்தித்த வந்த டிரம்ப், முதல்முறையாக முக கவசம் அணிந்திருந்தார். 

Tags:    

மேலும் செய்திகள்