"இலங்கையை குறிவைத்தால் பதிலடி நிச்சயம்" - அதிபர் ராஜபக்சே எச்சரிக்கை

இலங்கையில் உயிர்நீத்த போர் வீர‌ர்களை கவுரவிக்கும் தேசிய படை வீர‌ர் நினைவு நிகழ்வு நடைபெற்றது.

Update: 2020-05-20 05:45 GMT
இலங்கையில் உயிர்நீத்த போர் வீர‌ர்களை கவுரவிக்கும் தேசிய படை வீர‌ர் நினைவு நிகழ்வு நடைபெற்றது. இலங்கையின் நாடாளுமன்ற மைதானத்தில் உள்ள தேசிய படைவீர‌ர் நினைவு தூபிக்கு அருகே இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அதிபர் கோட்டாபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே, அமைச்சர்கள், பாதுகாப்பு செயலாளர் முப்படை தளபதிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய இலங்கை அதிபர் ராஜபக்‌சே, இலங்கையை இலக்கு வைக்கும் அமைப்புகளை இலங்கையில் இருந்து வெளியேற்ற ஒருபோதும் தயங்கபோவதில்லை என்றார்.
Tags:    

மேலும் செய்திகள்