கைதிக்கு கொரோனா தொற்று இருப்பதாக பரவிய தகவல் : இலங்கையில் சிறைக்குள் வெடித்த கலவரம் - தீவைப்பு

இலங்கையில் சிறைக்குள் ஏற்பட்ட கொரோனா பீதியில் மூண்ட கலவரம் மற்றும் அதைக் கட்டுப்படுத்த நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2020-03-21 19:54 GMT
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா, இலங்கையில் பெரும் கலவரத்தை ஏற்படுத்தி உள்ளது. அனுராதபுரம் சிறைக்குள்  இருக்கும் கைதி ஒருவருக்கு, கொரோனா இருப்பதாக தகவல் பரவியுள்ளது. இதைத் தொடர்ந்து, தங்களை வெளியேற்றுமாறு கைதிகள் போர்க்கொடி உயர்த்தினர். இதைத் தொடர்ந்து அவர்கள் வெளியேறவும் முயன்றுள்ளனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாக சிறை அதிகாரிகள் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு கைதிகள் எதிர்​​ப்பு  தெரிவித்த நிலையில், சிறைக்குள் தீ பற்றியது. இதனால் பெரும் கலவரம் மூண்ட நிலையில், அதைக் கட்டுப்படுத்தும் விதமாக போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில், காயமடைந்த 6 பேரைமீட்டு அனுராதபுரம் மருத்துவமனையில் சேர்த்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி  இருவர் உயிரிழந்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்