சீன பயணியை பார்த்து அச்சமடைந்த மக்கள் - போலீசார் மற்றும் மருத்துவர்கள் விசாரணை

ராமேஸ்வரம் வந்த சீன சுற்றுலா பயணியை பார்த்து, அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.

Update: 2020-02-08 11:41 GMT
ராமேஸ்வரம் வந்த சீன சுற்றுலா பயணியை பார்த்து, அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்த உசிங் என்பவர் குறித்து அச்சமடைந்த ஓட்டல் ஊழியர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்குவந்த போலீசார் மற்றும் மருத்துவர்கள் அவரிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். மேலும் சீனாவை சேர்ந்த ஒருவர் தமிழகத்திற்கு வர எப்படி அனுமதி அளிக்கப்பட்டது எனவும் அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்