"இந்தியாவுடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு" - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் விருப்பம்

இந்தியாவுடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண விரும்புவதாக, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்

Update: 2019-06-14 11:43 GMT
இந்தியாவுடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண  விரும்புவதாக, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார். கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகர் பிஷ்கேக் நகரில்  நடைபெற்று வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொண்டுள்ள அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனை தெரிவித்துள்ளார். பிரச்சினைகளை ராணுவ பலம் மூலம் பேசித்தீர்க்க முடியாது என்றும், அமைதியும், பதட்டமும் குறைய மனிதாபிமான அடிப்படையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும் என்று கூறியதாகவும் தகவல்கள் குறிப்பிடுகின்றன. 
Tags:    

மேலும் செய்திகள்