இந்திய மீனவர்கள் ஊடுருவல் குறித்து இலங்கை கடற்படை அறிக்கை

தமிழக மீனவர்களின் அத்துமீறிய செயல்களால், தங்களது படகுகளுக்கு சேதம் ஏற்படுவதாக, இலங்கை கடற்படை புகார் தெரிவித்துள்ளது.

Update: 2019-01-15 18:16 GMT
தமிழக மீனவர்களின் அத்துமீறிய செயல்களால், தங்களது படகுகளுக்கு சேதம் ஏற்படுவதாக, இலங்கை கடற்படை புகார் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, இலங்கை கடற்படை சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில், இந்திய எல்லைப் பகுதியில் மீன்பிடிக்கும் பல மீனவர்கள்,   இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைவதாக இலங்கை கடற்படை குற்றம்சாட்டியுள்ளது. 

யாழ்ப்பாணம் பகுதியில், கடந்த சில தினங்களில் மட்டும் ஐநூற்றுக்கும் அதிகமான படகுகள் வந்ததாகவும் அவை எச்சரித்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழையும் மீனவர்கள், தங்களது படகுகளை சேதப்படுத்துவதாகவும், இலங்கை மீனவர்களின் சொத்துக்களையும் சேதப்படுத்திவிட்டு தப்பி விடுவதாகவும் இலங்கை கடற்படையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்