"இலங்கையின் எதிர்காலம் மக்களின் கையில் உள்ளது" - ராஜபக்சே

இலங்கையின் எதிர்காலம் மக்களின் கையில் உள்ளது என்று ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

Update: 2018-11-10 08:51 GMT
நேற்று இரவு அந்நாட்டு அதிபர் சிறிசேனாவின் ஒப்புதல் பேரில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. இந்நிலையில், இது தொடர்பாக ராஜபக்சே தனது சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். இதில் மக்கள் தங்கள் விருப்பங்களை தெரிவிப்பதற்கான வழியை உருவாக்கி தர வேண்டியது தலைவர்களின் கடமை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மக்களின் விருப்பப்படி நடத்தப்படும் பொதுத்தேர்தலின் மூலம் நிலையான ஆட்சி உருவாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்