இலங்கையில் 7 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்பு

இலங்கையில் அரசியல் குழப்பம் நீடித்து வரும் நிலையில், அதிபர் சிறிசேனா முன்னிலையில் புதிதாக 7 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

Update: 2018-11-09 08:26 GMT
இலங்கையில் அரசியல் குழப்பம் நீடித்து வரும் நிலையில், அதிபர் சிறிசேனா முன்னிலையில் புதிதாக 7 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இதன்படி, சுசில் பிரேமஜயந்த சட்டத்துறை அமைச்சராகவும், பந்துல குணவர்தன, சர்வதேச வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராகவும், சந்திரசேன, சமூக அதிகார சபையின் அமைச்சராகவும் பதவியேற்றனர். இதேபோல், லக்ஷ்மன் வசந்த பெரேரா, சலிந்த திஸாநாயக்க, ரத்நாயக்க, அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்