ராஜபச்சே அமைச்சரவையில் பதவியேற்றவர் ராஜினாமா
மஹிந்தா ராஜபக்சே அமைச்சரவையில் பிரதி அமைச்சராக பதவியேற்ற காலி மாவட்டத்தை சேர்ந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனுசநாணயக்காரா தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.
அதிபர் மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சட்டவிரோதமாக அரசமைப்புக்கு முரணான நடவடிக்கைக்கு துணை போகக்கூடாது என்ற முடிவிற்கு வந்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.