வயநாட்டில் பரபரப்பு - வெளியான அதிர்ச்சி வீடியோ

Update: 2024-04-24 09:41 GMT

கேரள மாநிலம் வயநாட்டில், தமிழர்கள் வசிக்கும் பகுதிக்கு துப்பாக்கியுடன் வந்த மாவோயிஸ்டுகள், ஓட்டு போடக் கூடாது என மிரட்டல் விடுத்துள்ளனர். நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், மாவோயிஸ்டுகள் இவ்வாறு மிரட்டல் விடுத்துள்ளனர். வாக்களிப்பதால் எந்த பயனும் இல்லை என்று அப்பகுதி மக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு 20 நிமிடம் தொடர்ச்சியாக முழக்கங்களை எழுப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியான நிலையில், வந்தவர்கள் சி.பி.மொய்தீன், ஆஷிக், சந்தோஷ், சோமன் என்பதும் தெரியவந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்