மலேசியாவில் டூ சென்னை - போலி பாஸ்போர்ட்டில் வந்த இருவர்...அதிர்ச்சி கொடுத்த அதிகாரிகள்

Update: 2024-04-19 02:23 GMT

மலேசியாவில் டூ சென்னை - போலி பாஸ்போர்ட்டில் வந்த இருவர்...அதிர்ச்சி கொடுத்த அதிகாரிகள்

#thanthitv | #chennaiairport |

வங்கதேசத்தை சேர்ந்த இளம் பெண் உட்பட இருவர், போலி பாஸ்போர்ட் மூலம் மலேசியாவில் இருந்து சென்னை வந்த நிலையில் கைது செய்யப்பட்டனர். மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சென்னை விமானம் நிலையம் வந்த இருவரும், விமான நிலையை குடியுரிமை அதிகாரிகளின் சோதனையில் சிக்கியிருக்கின்றனர். மேற்குவங்க மாநில முகவரியுடன் இருவரும் போலி பாஸ்போர்ட்டில் இந்தியாவிற்குள் ஊடுருவியது தெரியவந்தது. வங்கதேசத்தை சேர்ந்த பர்மன் மற்றும் சுப்ரதா ஆகிய இருவரையும் கைது செய்துள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்