2022-23 ஆம் ஆண்டிற்கான இலக்கிய மாமணி விருதுகள்...விருது பெறுவோரின் பட்டியல் வெளியீடு

Update: 2024-01-25 16:13 GMT

அதன்படி, 2022-ஆம் ஆண்டிற்கான விருதுகளை, கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த முனைவர் அரங்க. ராமலிங்கம், விருதுநகரைச் சேர்ந்த கொ.மா.கோதண்டம் மற்றும் கோவையைச் சேர்ந்த முனைவர் சூர்யகாந்தன் ஆகியோருக்கு வழங்கப்படவுள்ளது. இதேபோல், 2023-ஆம் ஆண்டிற்கான இலக்கிய மாமணி விருதுகள் கடலூரைச் சேர்ந்த ஞா. மாணிக்கவாசகன், நெல்லையைச் சேர்ந்த சு. சண்முகசுந்தரம் மற்றும் சிவகங்கையைச் சேர்ந்த ச. நடராசன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு தேர்வாக நீலகிரியைச் சேர்ந்த திருமதி மணி அர்ஜூணன், திருவாரூரைச் சேர்ந்த அர. திருவிடம் மற்றும் சென்னையைச் சேர்ந்த க. பூரணச்சந்திரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இலக்கிய மாமணி விருது பெறுபவர்களுக்கு 5 லட்ச ரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம் உள்ளிட்டவை வழங்கப்படும்

Tags:    

மேலும் செய்திகள்