அதிர வைத்த வாலிபர் மரணம்... போதையில் பலியா..? சிக்கிய இருவர்... திகிலில் திருப்பத்தூர்

Update: 2024-04-27 14:20 GMT

திருப்பத்தூர் அருகே மர்மமான முறையில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில், அப்பகுதியை சேர்ந்த இரு இளைஞர்களை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அவ்வை நகரைச் சேர்ந்த விறகு வெட்டும் தொழிலாளியான மணிக்கு 7 பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த சந்துரு மற்றும் மோகன் ஆகிய 2 இளைஞர்கள் அவரது வீட்டிற்குச் சென்று, தங்களின் மகன் பழனிவேல் அளவுக்கு அதிகமான போதையில் குடிசை ஒன்றில் படுத்துகிடப்பதாகக் கூறியுள்ளனர். பேச்சுமூச்சின்றி கிடந்த பழனிவேலை மருத்துவமனையில் அனுமதித்தபோது, பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பழனிவேலின் தாயார் அளித்த புகாரின்பேரில், வீட்டுக்கு வந்து தகவல் கூறிய சந்துரு, மோகன் ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்