FullTime போலீஸ்; PartTime வழிப்பறி, அத்துமீறல்... சிக்கிய காவலர்... தூத்துக்குடியில் ஷாக்

Update: 2024-03-28 18:08 GMT

கடற்கரை பூங்காவில் தனிமையில் இருந்த காதலர்களை செல்போனில் படம் பிடித்து மிரட்டி செயின் பறிப்பில் ஈடுபட்ட ஆயுதப்படை காவலரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியை சேர்ந்தவர் டென்னிஸ் ராஜா. நெல்லை, மணிமுத்தாறில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வரும் இவர் விடுமுறையில் சொந்த ஊர் திரும்பியிருக்கிறார். இந்நிலையில், தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை பூங்காவுக்கு சென்ற டென்னிஸ் ராஜா, அங்கு தனிமையில் இருந்த காதலர்களை செல்போனில் வீடியோ எடுத்து மிரட்டிய நிலையில், சம்பந்தப்பட்ட பெண் அணிந்திருந்த நகைகளையும் பறித்துச் சென்றிருக்கிறார். இதனால் அதிர்ச்சிக்குள்ளான பெண்ணின் காதலன், மறுநாள் தன் நண்பர்களுடன் சேர்ந்து முத்துநகர் கடற்கரைக்கு வந்தபோது, அதே இடத்தில் நின்றிருந்த டென்னிஸ் ராஜாவை துரத்தியிருக்கிறார். தான் வந்தை பைக்கை விட்டுவிட்டு காவலர் ஓட்டம் பிடித்த நிலையில், அந்த பைக்கை கைப்பற்றிய இளைஞர்கள் பைக்குடன் போலீசில் புகாரளித்தனர். விசாரணையில், நெல்லையில் காணாமல் போனதாக கூறி போலீசார் தேடி வந்த இரு சக்கர வாகனத்தை டென்னிஸ் ராஜா பயன்படுத்தி வந்தது தெரியவர, அவரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்