குமாஸ்தாவை கஞ்சா போதையில் தாக்கிய கும்பல் - திருவாரூரில் பரபரப்பு

Update: 2024-04-24 02:09 GMT

திருவாரூர் விஜயபுரம் பகுதியை சேர்ந்தவர் சரவணன். குமாஸ்தாவான இவர், சம்பவத்தன்று நேதாஜி சாலையில் பைக்கில் சென்றுகொண்டிருந்த போது, மூன்று இளைஞர்கள் கஞ்சா போதையில் வழிமறித்து தாக்கியுள்ளனர். தொடர்ந்து சரவணின் பைக் மற்றும் செல்போனை மூவரும் பறித்துச் சென்ற நிலையில், போலீசில் புகாரளிக்கப்பட்டது. இது குறித்து அருகேயுள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார், திருவாரூர் அண்ணா காலணியை சேர்ந்த ராகவன், ரஞ்சித்குமார் மற்றும் வினோத் ஆகிய மூன்று இளைஞர்களை கைது செய்தனர். மூவர் மீதும் ஏற்கனவே சில வழக்குகள் காவல்நிலையத்தில் இருப்பது தெரியவர, மூவரிடம் இருந்தும் அவர்கள் வழிப்பறி செய்த பைக்கை பறிமுதல் செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்