திருச்செந்தூர் கோயில் அருகே...புதுமணத் தம்பதிக்கு அதிர்ச்சி...சிறிது நேரத்தில் நடந்த அதிசயம்

Update: 2024-03-29 09:44 GMT

திருச்செந்தூர் முருகன் கோவிலில் புதுமண தம்பதியின் காணாமல் போன தங்க நகையை கண்டெடுத்து தந்த வியாபாரிக்கு பாராட்டுகள் குவிகின்றன... பால்ராஜ் - இசக்கி பிரியா தம்பதி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர். தூண்டிகை விநாயகர் கோவில் அருகே உள்ள பலவேசக் கண்ணன் என்பவரின் வளையல் கடை முன்பு பால்ராஜின் தங்க கைக்காப்பு தவறி விழுந்தது... அதை அவர் கவனிக்கவில்லை. நகை கீழே கிடப்பதைக் கண்ட பலவேசக் கண்ணன் உடனடியாக சிசிடிவி கேமராவை ஆராய்ந்து நகையை முருகன் கோவில் அலுவலகத்தில் ஒப்படைத்து ஒலிப்பெருக்கி மூலம் அறிவிக்கக் கூறியுள்ளார்... தொடர்ந்து பால்ராஜ் தனது நகையைத் திரும்பப் பெற்றுக் கொண்டார்... நகையை உரியவரிடம் ஒப்படைத்த பலவேசக் கண்ணனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்