7 ஆண்டு கழித்து கிடைத்த வரம்...அலட்சியத்தால் பறிபோன உயிர்...விரக்தியில் கதறும் மொத்த குடும்பம்

Update: 2024-03-29 12:06 GMT

விருதுநகரில், 7 ஆண்டுகளுக்குப் பிறகு கருவுற்ற பெண்ணுக்கு, மருத்துவர்கள் அலட்சியத்தால், வயிற்றிலேயே சிசு இறந்ததால் உறவினர்கள் வேதனை அடைந்தனர். ராஜபாளையத்தை சேர்ந்த இசக்கி என்ற பெண்ணுக்கு திருமணமான நிலையில், 7 ஆண்டுகள் கழித்து கருவுற்றுள்ளார். இதற்காக, ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சைக்காக சென்று பரிசோதனை செய்து வந்துள்ளார். மருத்துவர்களின் பரிந்துரை பேரில் ஸ்கேன் எடுக்கச் சென்ற போது, 3 நாட்களுக்கு முன்பே குழந்தை இறந்தது தெரியவந்தது. மருத்துவர்களின் அலட்சியமே சிசு உயிரிழக்கக் காரணம் எனக்கூறி, மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்